தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இலவச இரத்த கண்டறியும் முகம் மற்றும் இரத்த வகை சேகரிப்பு முகாம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 15 August 2022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இலவச இரத்த கண்டறியும் முகம் மற்றும் இரத்த வகை சேகரிப்பு முகாம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் நகர் கிளை சார்பாக 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலவச இரத்த கண்டறியும் முகம் மற்றும் இரத்த வகை சேகரிப்பு முகாம் நடத்தப்பட்டது. 


இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் இலவசமாக தங்களுடைய இரத்த வகையை அறிந்து கொண்டு பலனடைந்தார்கள் மேலும் இந்த முகாமில் பலரின் தகவல்களை சேகரித்ததின் மூலமாக பலர் பயனடைய இருக்கிறார்கள் இதில் திங்கள் நகர் கிளை சார்பாக தலைவர் ஏ ஜாகிர் உசேன் செயலாளர் எஸ் நிவாஸ் பொருளாளர் ஷிகாஸ்கான் துணைத் தலைவர் எ சபிக் அலி துணைச் செயலாளர் எஸ் அப்சல் மாவட்ட மருத்துவர் அணி ரியாஸ் அலி கிளை மருத்துவர் அணி அமீர் சுகைல் மாவட்ட தொண்டர் அணி ஆஷிக் ரகுமான் கிளை தொண்டரணி அம்ஜத் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதில் இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு என்ற தலைப்பில் மாவட்ட செயலாளர் உசைன் ஜவாஹிர் அவர்கள் உரையாற்றினார்கள் மற்றும் நாகர்கோவில் மாநகர கிளை குலசேகரம் கிளை போன்ற பல கிளைகளிளும் இது போன்ற முகாம்கள் நடத்தப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் 

No comments:

Post a Comment