குமரியில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஏடுகள் குழு ஆய்வு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 18 August 2022

குமரியில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஏடுகள் குழு ஆய்வு.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் இன்று  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஏடுகள் ஆய்வுக் குழு தலைவர் திரு.நா.ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது . 


ஆய்வுக் கூடத்தில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப. , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஹரி கிரண் பிரசாத் , இ.கா.ப. சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு சட்டமன்ற உறுப்பினர்கள் திருமதி.வி.அமலு (குடியாத்தம்), திரு.அ.நல்லதம்பி (கங்கவள்ளி) திருமதி.எஸ்.தேன்மொழி, (நிலக்கோட்டை), திரு.த.வேலு (மயிலாப்பூர்), நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு.ரெ.மகேஷ், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.ஆர்.காந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment