கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஏடுகள் ஆய்வுக் குழு தலைவர் திரு.நா.ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது .
ஆய்வுக் கூடத்தில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப. , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஹரி கிரண் பிரசாத் , இ.கா.ப. சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு சட்டமன்ற உறுப்பினர்கள் திருமதி.வி.அமலு (குடியாத்தம்), திரு.அ.நல்லதம்பி (கங்கவள்ளி) திருமதி.எஸ்.தேன்மொழி, (நிலக்கோட்டை), திரு.த.வேலு (மயிலாப்பூர்), நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு.ரெ.மகேஷ், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.ஆர்.காந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment