இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது, தங்க நகை மீட்பு, விரைந்து கொள்ளையனை கைது செய்த குமரி மாவட்ட போலீசார்.
கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிறமடம் பெருமாள் கோவிலுக்கு தெற்கு பக்கம் மேரி கலா என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, பார்த்தால் அடையாளம் தெரியக்கூடிய நபர் ஒருவர், மேரி கலா கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்து சென்றதாக பூதப்பாண்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
மேலும் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவரை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. D.N.ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட முட்டைகாடு பகுதியை சேர்ந்த சிபு (39) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து தங்க நகையை மீட்டனர். காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்துராஜ் அவர்கள் குற்றவாளியை நீதிமன்றம் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
No comments:
Post a Comment