கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் நேற்று இரவு 10:30 மணிக்கு புகார் மனு அளிக்க சென்றிருந்த பொதுமக்கள் காவல் நிலையம் பூட்டி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் காவல் நிலைய வேறு எங்காவது மாற்றப்பட்டிருக்கிறதா என்று மனு கொடுக்காமல் திரும்பி சென்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக சமூக ஆர்வலர்களிடம் கேட்டபோது நமது மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் போதை ஒழிப்பு சம்பந்தமாக பொதுமக்களிடமும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில் இப்படி காவல் நிலையம் பூட்டி கிடப்பது அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது இதை கருத்தில் கொண்டு மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் அனைத்து காவல் நிலையமும் 24 மணி நேரமும் செயல்படுகிறதா என்று கண்காணிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பூட்டப்பட்ட காவல் நிலையம் எதற்காக இரவு 10.30 மணிக்கு பூட்டப்பட்டது என்று விளக்கம் கேட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம் என்று கூறினார்கள்.
No comments:
Post a Comment