பஸ் நிலையத்தில் கேட்பாரின்றி விடப்பட்ட தலைமை காவலரை முதியோர் இல்லத்தில் சேர்க்க உத்தரவிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் .
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.D.N.ஹரி கிரன் பிரசாத் I.P.S அவர்கள் ஓய்வு பெற்ற தலைமை காவலர் விக்ரமன் என்பவர், மனைவியை இழந்த நிலையில் பிள்ளைகளால் கைவிடப்பட்டு, பஸ் நிலையத்தில் பிச்சை எடுக்கும் நிலையை நாளிதழை பார்த்து அறிந்தவுடன் அவரை மீட்டு முதியோர் பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்க உத்தரவிட்டார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுபடி குமரி காவல்துறையினர் ஓய்வு பெற்ற தலைமை காவலரை மீட்டு அவரை சலூன் கடைக்கு அழைத்து சென்று அவருக்கு முடித்திருத்தம் செய்து, தற்காலிகமாக முதியோர் பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்தனர்.
No comments:
Post a Comment