இந்தநிலையில் செல்வகுமாரி தனது காதலன் கார்த்திக் (24) என்பவருடன் கோட்டார் போலீசில் தஞ்சமடைந்தார். தாங்கள் இருவரும் சிறுவயதில் இருந்து காதலித்து வந்தோம். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே எனக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப் பட்டு வருகிற 29-ந் தேதி திருமணம் நடத்தவும் ஏற்பாடு செய்தனர். இதனால் நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாக செல்வகுமாரி போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் கார்த்திக் மற்றும் செல்வகுமாரியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர்.
அப்போது செல்வகுமாரியை பெற்றோர் தங்களுடன் வருமாறு அழைத்தனர். ஆனால் செல்வகுமாரி காதலன் கார்த்திக் உடன் தான் செல்வேன் என்றும், அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறி னார். பெற்றோர் பலமுறை அழைத்தும் அவர் செல்ல மறுப்பு தெரிவித்ததால் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் கார்த்திக் கின் பெற்றோர் செல்வக்குமாரியை ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து காதல் ஜோடியை போலீசார் வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.
No comments:
Post a Comment