நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது, அதே போன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வெள்ளாடிச்சிவிளை பாஜக பிரமுகர் முத்துராமன் தலைமையில் அப்ப பகுதி சேர்ந்த இளைஞர்கள் 10 அடி விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து ஊர் மக்களை அழைத்து சிறப்பு பூஜை நடத்தினர்.
மேலும் நெல் மணியால் சிவன் உருவம் வரைந்து 108 சங்குகளால் பாலபிஷேகம் செய்து யாகம் நடத்தினர் இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பெண்கள் குழந்தைகள் என வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் வரும் ஞாயிற்றுக்கிழமை விநாயக சிலையை அருகே. உள்ள நீர்நிலைகளில் கரைக்கு இருப்பதாக இளைஞர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment