கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் சிறுவனின் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை தேடும் போலீசார் . வைரலாகும் சிசிடிவி காட்சி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் வடிவீஸ்வரம் பகுதியில் பிரதிஷ் என்பவரது குடும்பம் வசித்து வருகிறது அவரது மகன் கைலாஷ் வழக்கம் போல் தனது சைக்கிளை வீட்டின் முன் பகுதியில் நிறுத்திவிட்டு இரவு தூங்கச் சென்றான்.
மறுநாள் காலையில் பள்ளிக்குச் செல்வதற்காக சைக்கிளை தேடிய போது காணவில்லை உடனடியாக அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்ததோடு அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சியை ஆய்வு செய்த போது மர்ம நபர் ஒருவர் நள்ளிரவு சுமார் ஒரு மணிக்கு அப்பகுதியில் நடந்து வந்து தெருவில் யாராவது இருக்கிறார்களா என நோட்டமிட்ட பின்பு சைக்கிளை திருடி சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கோட்டார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர் .
No comments:
Post a Comment