கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகர வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா குளச்சலில் நடைபெற்றது தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர் துணைத்தலைவர் முகமது காசிம் வரவேற்றுப் பேசினார் குமரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நாகராஜன் குளச்சல் காவல் நிலைய ஆய்வாளர் கிறிஸ்டி நகர்மன்ற தலைவர் நசீர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
கூட்டத்தில் புதிய தலைவராக பிரபாகரன் துணைத்தலைவராக முகமது காசிம் செயலாளராக பெஞ்சமின் பிராங்கிளின் உதவிச் செயலாளராக முகமது ஷாபி பொருளாளராக டென்னிசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மற்றும் குளச்சல் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குட்கா போன்றவைகளை விற்பனை செய்வதை முற்றிலும் தவிர்ப்பது வணிகர் நல வாரியத்தில் சங்க உறுப்பினர்களை இணைத்து பயன்பெற செய்வது சங்க சிறுசேமிப்பு திட்டம் தொடங்குவது உள்பட பல தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment