நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப்பிாிவு போலீஸ் நிலைய புதிய கட்டிடம் ரூ.76 லட்சம் செலவில் கோட்டார் போலீஸ் நிலையம் எதிரே கட்டப்பட்டது. கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
கட்டிடத்தை சென்னையில் இருந்து தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கட்டிட வளாத்தில் குத்துவிளக்கு ஏற்றினார். இதனைதொடர்ந்து புதிய கட்டிடத்தில் உள்ள ஒவ்வொரு அறைகளையும் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதிய கட்டிடத்தில் தரைதளம் மற்றும் முதல் தளம் உள்ளன.
இதில் இன்ஸ்பெக்டர் அறை, ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக ஓய்வு எடுக்கும் அறைகள், கூட்டரங்கு, விசாரணை அறை, பொது அறை கள் உள்ளிட்டவை அமைக்கப் பட்டிருந்தன. நிகழ்ச்சியில் நாகரா் கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார், போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு இன்ஸ் பெக்டர் அருண் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment