கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் கருங்கல் பகுதிக்கு பொருட்களைக் கொண்டு வந்துள்ளார் பொருட்களை இறக்கி விட்டு திரும்பி நாகர்கோவில் செல்லும் போது போதையில் லாரியை ஓட்டியுள்ளார். அப்போது வழியில் சில கார்களை இடித்து தள்ளிவிட்டு வேகமாக வந்துள்ளார். அப்போது இவரது செயல்பாடுகளைக் கண்டு லாரியிலிருந்து கிளீனர் மற்றும் லோடு மேன்கள் லாரியில் இருந்து இறங்கி பேருந்தில் ஏறி ஊர் திரும்பி உள்ளனர்.
பின்னர் போதையில் தனியாக லாரியை ஓட்டிச் சென்றவர் திக்கணங்கோடு அருகே உள்ள தனியார் ஐடிஐ- பகுதியில் சாலையோரமாக நிறுத்தி விடப்பட்டிருந்த திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த வேன் மீது லாரி பயங்கரமாக மோதியது அதில் மற்றும் வேன் சேதமடைந்தது. அப்போது எதிரே வந்த கார் ஒன்று அதிர்ஷ்டவசமாக விபத்தில் இருந்து தப்பியது இந்த விபத்தில் நாளில் இரு பக்கங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடம் வந்து கருங்கல் காவல்துறையினர் லாரி மற்றும் வேனை சாலையில் இருந்து அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர் போதையில் இருந்த லாரி டிரைவரை கைது செய்து கருங்கல் காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது சம்பவ நேரத்தில் பொதுமக்கள் நடந்து சென்று இருந்தாலும் அல்லது எதிரில் வந்த வாகனங்கள் மீது மோதி இருந்தாலோ பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் என்று கூறினார். தொடர்ந்து லாரி டிரைவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment