அநியாய விலைவாசி உயர்வை கண்டித்தும், மின்சார மசோதாவை திருத்தம் செய்யகோரியும், சொத்துவரி உயர்வை பரிசீலனை செய்யக் கோரியும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, குமரி மாவட்ட செயலாளர் S.சுபாஷ்சந்திரபோஸ் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நாகர்கோவில் மினாட்சிபுரம் அண்ணா பேரூந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள இந்தியன் வங்கி முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் பி.தாமரை சிங், ஜி.சுரேஷ் மேசிய தாஸ், எஸ். நாராயணசுவாமி முன்னிலை வகித்தனர் செல்வராணி, எஸ்.சுந்தரம், சி.சொக்கலிங்கம், எஸ்.அனில், .எம்.சுதா மதன் என் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment