நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உள்ள குறைபாடுகள் நிவர்த்தி செய்தல் சம்பந்தமாக உரிமையாளர்களுடனான கூட்டம் குமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மாநகராட்சி மேயருமான வழக்கறிஞர் ரெ.மகேஷ் அவர்கள் தலைமையில் அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள பெருமாள் அரங்கில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன் துணை மேயர் மேரி பிரின்சிலதா சுகாதார துறை பொறுப்பு ஜாண் மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உட்பட சுகாதார துறை அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment