தமிழக அரசின் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், ஒன்றிய பிஜேபி அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவை எதிர்த்தும் சிபிஐ( எம்) சார்பில் இராஜாக்க மங்கலம் ஒன்றியம் ஈத்தாமொழி மின்வாரிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.குமரேசன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.கே.பிரசாத், மாவட்டக்குழு உறுப்பினர் கே.பி. பெருமாள், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன் ஆகியோர் பேசினர். இதில் தாமோதரன், சுப்பிரமணியம், மனோகரன், சொர்ணம், ஆகாஷ், ஆர்.என்.கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment