பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மகளிர் சுய உதவி குழு மூலம் நடைமு றைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு சத்துணவு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது, எனவே காலை உணவு திட்டத்தை மகளிர் சுய உதவி குழு மூலம் வழங்கும் என்றால் நடைமுறை சிக்கல்களும் , பாதுகாப்பற்று தன்மை ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.
எனவே சத்துணவு ஊழியர்களைக் கொண்டே காலை உணவு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் , மகளிர் சுய உதவி குழு மூலம் வழங்குவதை கைவிட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
No comments:
Post a Comment