இரணியல் அருகே மகனை கோடாரியால் வெட்டி கொன்ற தந்தை. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 30 August 2022

இரணியல் அருகே மகனை கோடாரியால் வெட்டி கொன்ற தந்தை.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே பாளையம்சரல்விளை பகுதியை சேர்ந்தவர் சௌந்தரபாண்டியன் (வயது 80) இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 6 பிள்ளைகள் உள்ளனர் 4 பேருக்கு திருமணம் ஆகிவிட்டது 2 மகன்களும் இன்னும் திருமணம் ஆகவில்லை. 


இதில் ஒரு மகன் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தார். நாகராஜன் (வயது 40) என்பவரும் அவரது தந்தை சௌந்தரபாண்டியன் உம் ஒரே வீட்டில் வசித்து வந்தனர் நாகராஜன் கொத்தனார் வேலைக்கு சென்று வந்தார் தினமும் குடித்துவிட்டு வந்து தனது தந்தையிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். 


இதனால் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது நேற்றும் நாகராஜன் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார் அப்போது வீட்டில் இருந்த பொருட்களை அடித்து சூறையாடியது உடன் தகராறில் ஈடுபட்டார். அவரை தந்தை சௌந்தரபாண்டியன் சமாதானம் செய்ய முயன்றார் ஆனால் நாகராஜன் கேட்கவில்லை. தந்தை சௌந்தரபாண்டியன் தாக்க முயன்றதாக தெரிகிறது இதனால் ஆத்திரமடைந்த சௌந்தரபாண்டியன் நாகராஜனை கோடாரியால் வெட்டி கொலை செய்தார். 


பின்னர் இரணியல் காவல் நிலையத்தில் சௌந்தரபாண்டியன் சரணடைந்தார். போலீசில் மகனை கொலை செய்ததாக கூறியதை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு பிணமாக கிடந்த நாகராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை நடந்ததா அல்லது சொத்து பிரச்சினை காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 


சௌந்தரபாண்டியன் இடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து இரணியல் போலீசார்  வழக்கு பதிவு செய்துள்ளனர். மகனை தந்தை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. 

No comments:

Post a Comment