கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடை அடுத்த மாத்திரவிளை பகுதியில் அமைந்துள்ளது தூய ஆரோபண ஆலயம் இந்த ஆலயத்தில் 10 நாட்கள் திருவிழா மிக சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெறும். இன்று ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு காலை 8.30 மணி அளவில் முதல் திருவிருந்து திருப்பலி நடைபெற்றது.
மாலை 5.45 மணி அளவில் ஜெபமாலை மற்றும் ஆடம்பர மாலை திருப்பலி நடைபெற்றது. பெனாடிட் அனலின் தலைமை தாங்கினார். இரவு 9 மணி அளவில் மாபெரும் தேர்பவனி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விழாவில் மாத்திர விளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக வருகை தந்துள்ளனர்.
No comments:
Post a Comment