மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து தேசிய நெடுஞ்சாலை பணிகளை துரிதமாக துவங்கி முடிக்க வேண்டும் என கோரினேன். சாலை மிகவும் சேதமடைந்து இருப்பதை விளக்கி அதனால் ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிர் சேதங்களையும் எடுத்து கூறினேன்.
ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்ட பின்னரும் பணிகள் துவங்குவதில் ஏற்பட்ட கால தாமதத்தை சுட்டிக் காட்டி விரைவில் பணிகளை துவங்கி சாலையை செப்பனிடுமாறு கேட்டு கொண்டேன்.
இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வுகாண ஆவன செய்யப்படும் என முதலமைச்சர் உறுதியளித்தார்.
No comments:
Post a Comment