கனிமவளங்கள் கடத்தப்படுவதாக ஆட்சியரிடம் புகார் மனு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 29 August 2022

கனிமவளங்கள் கடத்தப்படுவதாக ஆட்சியரிடம் புகார் மனு.

கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு , வலியாற்றுமுகம் , தோட்டியோடு, நட்டாலம் போன்ற பகுதிகளில் அரசு அனுமதியோடும் அனுமதி இல்லாமலும் பல கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.


இந்த குவாரிகளில் பெரும்பாலான குவாரிகளில்  இருந்து கேரளாவிற்கு கனிமவளங்கள் கடத்தப்படுகின்றன இதனால் இங்கிருந்து பாறைபொடி காற்றில் பரவி சாலைகளில் , வீடுகள் , நீர்நிலைகள் பாறை புழுதிகள் நிறைந்து காணப்படுவதாகவும் தினதோறும் நூற்றுக்கணக்கான ராட்சத லாரிகள் மூலம் கேரளாவிற்கு கடத்த பட்டு வருவதாகவும். அனுமதி பெற்ற குவாரிகளில் குறிப்பிட சில பகுதிக்கு குறிப்பிட்ட அடிக்கு அனுமதி வாங்கிவிட்டு அந்த பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளையும் விலைக்கு வாங்கி அந்த மலைப்பகுதி இருந்த இடமே தெரியாத அளவில் பாறைகளை கற்களாகவும் எம் ஸ்டேண்டாகவும் கடத்த பட்டு வருவதால் குமரி இயற்கை வளம் பாதிக்கப்படுகிறது ஆகவே இது  நடவடிக்கை எடுக்க விளவங்கோடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் ஆட்லின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

No comments:

Post a Comment