கன்னியாகுமரி மாவட்டத்தின் போதைப் பொருட்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N. ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் பொது மக்களிடையே போதை பொருட்கள் விற்பனை குறித்து தகவல் தெரிவிக்கவேண்டிய எண்ணில் வரக்கூடிய தகவல்களை 7010363173 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடியாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.
மேலும் இவ்வண்ணிற்கு பொதுமக்கள் காலை ஏழு மணி முதல் மாலை ஆறு மணி வரை , 7010363173 என்ற எண்ணிற்கு அழைத்தோ அல்லது whatsapp மெசேஜ் மூலமாகவோ தகவல் அளிக்கலாம். தகவல் அளிப்பவரின் பெயர் முகவரி கண்டிப்பாக ரகசியம் காக்கப்படும்.
பொதுமக்களின் தகவல் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குமரி மாவட்டத்தை போதைப் பொருட்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment