குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சர் மனோதங்கராஜ் எச்சரிக்கை. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 26 August 2022

குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சர் மனோதங்கராஜ் எச்சரிக்கை.

நாகர்கோவில் மாநகராட்சி - பார்வதிபுரம் 5வது வார்டுக்குட்பட்ட கட்டயன் விளை பஞ்சபாண்டவர் கோவில் எதிரில் உள்ள சாலையை ₹25 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பணிகளுக்கும் பொது மக்களுக்கும் தேவையான ஜல்லி எம்சாண்ட் போன்றவைகளை குவாரிகள் கொடுக்கவில்லை என்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.


நாகர்கோவிலில் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது இதனை தெரிவித்தார் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படவில்லை என்றும் அதிக பாரங்களில் வெளி மாவட்டங்களில் இருந்து கனிம வளங்கள் ஏற்றி செல்லப்படுவதாகவும் அவ்வாறு அதிக பாரங்கள் ஏற்றி சென்றதாக திமுக ஆட்சிக்கு வந்த பின் இரண்டரை கோடி ரூபாய் அந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment