இன்ஸ்டாகிராமில் பெண்ணின் ஆபாச படத்தை பெண்ணின் நண்பர்களுக்கு அனுப்பி மிரட்டியவர் கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரால் கைது
கன்னியாகுமரி மாவட்டம் சேர்ந்த பெண் ஒருவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக அந்த பெண் தேவிகோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த ஆண்டு ஒரு மாதம் வேலை பார்த்துள்ளார். அங்கு பணிபுரிந்து வந்த ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும்,கருங்கல் கருமாவிளை பகுதியை சேர்ந்த ஸ்டாலின் பெனட் என்பவர் அந்த பெண்ணுடன் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டார்.
பின்பு அந்த பெண் தன்னுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காட்டி தன் ஆசைக்கு இணங்குமாறு மிரட்டி உள்ளார். அவர் மறுக்கவே அந்த பெண் பயின்று வரும் கல்லூரி நண்பர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இன்ஸ்டாகிரமாரில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்த பெண் இது குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இது சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் உத்தரவிட்டார்.
அதன்படி விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் பொறுப்பு ஆய்வாளர் திருமதி. ஜோதிலட்சுமி , தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் ஸ்டாலின் பெனட் என்பவனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment