குறைந்த பட்ச கல்வி தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி (ஆடை தயாரித்தல் தொழிற்பிரிவு மட்டும்) மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் குறைந்தபட்ச வயது வரம்பு 15 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை. தகுதிவாய்ந்த மாணவிகள் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளான 1) கம்மியர் மின்னணுவியல் 2) டெஸ்க் டாப் பப்ளிசிங் ஆப்ரேட்டர், 3) கம்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் புரோகிராம் அசிஸ்டெண்ட் 4) ஆடை தயாரித்தல் (எட்டாம் வகுப்பு தேர்ச்சி 5)சுருக்கெழுத்து (ஆங்கிலம்) 6) நவீன ஆடை வடிவமைப்பு தொழிற்நுட்பம் 7) மருத்துவ மின்னணுவியல் நுட்பவியலாளர் ஆகிய தொழிற்பிரிவில் சேர்ந்து பயிற்சி பெறலாம். பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம்.
பயிற்சி பெறுபவர்களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, பாடபுத்தகங்கள், காலணி, மாதந்தோறும் வருகைக்கேற்ப ரூ.750 உதவித்தொகை மற்றும் கட்டணமில்லா பேருந்து சலுகை வழங்கப்படும். மேலும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதிகளில் தங்கி பயிற்சி பெற வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். தமிழக அரசு வழங்கும் உயர்கல்வி உதவித்தொகை (ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் அரசு பள்ளியில் பயின்ற) மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை கூடுதலாக வழங்கப்படும்.
மேலும் தொழிற்பிரிவில் படிக்கும் போதே பிரபல தொழிற்நிறுவனங்களில் Internship Training உதவி தொகையுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் ஏற்பாடு செய்து தரப்படும்.
SMRV அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் சேர்ந்து மாணவிகள் பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு 9499055807, 9688333469 என்ற கைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
No comments:
Post a Comment