அகஸ்தீஸ்வரத்தில் இருந்து தொடங்கியது ராகுல் காந்தியின் 2ம் நாள் பயணம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 7 September 2022

அகஸ்தீஸ்வரத்தில் இருந்து தொடங்கியது ராகுல் காந்தியின் 2ம் நாள் பயணம்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, இரண்டாவது நாள் பயணத்தை அகஸ்தீஸ்வரத்தில் தொடங்குகிறார். அங்கிருந்து கொட்டாரம் வழியாக மதியம் சுசீந்திரத்திற்கு செல்லும் அவர், மதிய இடைவேளைக்குப் பிறகு, மாலையில் இடலாக்குடி வழியாக கோட்டார் சந்திப்பு செல்கிறார். அங்கு இரண்டாம் நாள் பயணத்தை ராகுல் காந்தி நிறைவு செய்கிறார். இரவு ஸ்காட் கல்லூரி வளாகத்தில் தங்கும் அவர், அடுத்த நாள் தக்கலை வழியாக முளகுமேடு நோக்கி நடைபயணம் மேற்கொள்கிறார். 


பத்தாம் தேதி இரவு தமிழக-கேரள எல்லையான செறுவாரக் கோணத்தில் பயணத்தை முடித்துக் கொண்டு, பதினொன்றாம் தேதியில் இருந்து கேரளாவில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். 

No comments:

Post a Comment