ராகுல் காந்தியின் நடை பயணத்தில் அரசியல் கட்சிக்காரர்களால் புறக்கணிக்கப்பட்ட சிறு குறு பத்திரிகையாளர்கள். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 7 September 2022

ராகுல் காந்தியின் நடை பயணத்தில் அரசியல் கட்சிக்காரர்களால் புறக்கணிக்கப்பட்ட சிறு குறு பத்திரிகையாளர்கள்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தொடர்ந்து 150 நாட்கள் 3500 கிலோமீட்டர் இந்தியாவை ஒருங்கிணைக்கும் இந்திய ஒற்றுமை பாதயாத்திரை எனும் நடை பயணம் மேற்கொள்ள இருக்கிறார் காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல்காந்தி.


இதற்கான முன்னேற்பாடுகளை சில தினங்களுக்கு முன்பே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் செய்து வந்தனர்.


இந்த மாபெரும் நடை பயண நிகழ்ச்சி குமரியில் இருந்து தொடங்க முடிவு செய்யப்பட்ட நாளிலிருந்து இன்று வரை இதைச் செய்தியாக வெளியிட்டு அதை பல லட்சக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொண்டர்களிடம் கொண்டு சேர்த்த சிறு பத்திரிகையாளர்கள் தற்போது ராகுல் காந்தி நடை பயணம் தொடங்கப்பட உள்ள இன்று அவருடைய பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கும் நடை பயணம் மேற்கொள்ளும் இடங்களுக்கும் செய்தி சேகரிக்க செல்வதற்கு பாஸ் கொடுக்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.


மாறாக பெரிய பெரிய பத்திரிகைகளுக்கு விளம்பரங்கள் கொடுத்தும் பெரிய பத்திரிகை நிருபர்களுக்கு அடையாள அட்டை கொடுத்து தங்களுடைய பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கும் நடைபயண நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பு விடுத்தது சிறு பத்திரிகைகளையும் சிறு பத்திரிகை நிருபர்களை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. இது முற்றிலும் கண்டனத்துக்குரிய செயலாகும் இளந்தலைவர் ராகுலின் நடை பயணத்தை குறித்த செய்தியை வெளியிட்டு கடை கோடி மக்கள் வரைக் கொண்டு சேர்த்த சிறு பத்திரிகைகளை அவமதித்து அந்த நிருபர்களை புறந்தள்ளியதை  குமரி மாவட்ட காங்கிரஸ் தலைமை இதை கண்டுகொள்ளாமல் விட காரணம் என்ன.?


பெரிய பத்திரிகைகள் உங்களிடம் பல லட்சங்களுக்கான விளம்பரங்களை பெற்றுக்கொண்டு தான் உங்களுக்கு செய்திகளை போட்டு தருகிறார்கள் ஆனால் சிறு பத்திரிகைகள் அப்படி அல்ல நீங்கள் விளம்பரம் கொடுக்காமலே சிறு பத்திரிகையாளர்கள் (அதாவது நிருபர்கள்) உங்கள் செய்திகளை பெரிதாக போட்டுத் தருகின்றார்கள். அது மட்டுமல்ல அந்தச் செய்தியை சோசியல் மீடியாக்கள் மூலம் பல லட்சக்கணக்கானோருக்கு கொண்டு சேர்த்தும் வருகின்றார்கள். அப்படிபட்ட நிருபர்களை நீங்கள் புறக்கணிக்க காரணம் என்ன.?


மற்ற மாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலத்தில் இருந்தும் வந்திருக்கிற தலைவர்களுக்கு நம்முடைய மாவட்டத்தை பற்றியோ நம்முடைய மாவட்ட நிருபர்களை பற்றியோ தெரியாது ஆனால் நமது மாவட்ட காங்கிரஸ் செய்தி பிரிவை சேர்ந்தவர்களுக்கு நன்கு தெரிந்தும் ஒரு குறிப்பிட்ட முன்னணி பத்திரிகை நிருபர்களை அழைத்து அடையாள அட்டை வழங்கி  மற்ற நிருபர்களை கைவிட காரணம் என்ன.?


சிறு பத்திரிகையாளர்களுக்கு நீங்கள் விளம்பரம் கொடுக்க வேண்டாம் குறைந்தபட்சம் செய்தி சேகரிக்க அனுமதியாவது வழங்கியிருக்க வேண்டும் அதை நீங்கள் செய்யவில்லை இதற்குக் காரணம் உங்கள் கட்சியின்  தொலைக்காட்சி நிருபராக இருக்கின்றவர் பேச்சுக்கு இசைந்து பெரிய பத்திரிகைகளுக்கும் பெரிய பத்திரிகை நிருபர்களுக்கும் மணியையும் செய்தியையும் கொடுக்க பத்திரிகை நிருபர் தான் காரணமா?


அவர் பேச்சுக்கு இசைந்து மணியையும் செய்தியையும் கொடுப்பீர்களா இல்லை காங்கிரஸ் பேரியக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை கடைகோடி தமிழன் வரை கொண்டு சேர்க்கும் சிறு பத்திரிகை மற்றும் பத்திரிகை நிருபர்களுக்கு நீங்களும் உங்கள் கட்சி நடத்துகின்ற நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு கொடுக்க மாட்டீர்களா?


புறக்கணிக்கப்பட்ட செய்தியாளர்களின் மனக்குமுறல் விரைவில் நீங்கள் அறிவீர்கள் இதுவே மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இருந்திருந்தால் முதலாவது நீங்கள் புறக்கணித்த அதே சிறு பத்திரிகையை தான் அழைக்கச் சொல்லி உங்களுடைய செய்தி தொடர்பாளருக்கு கூறியிருப்பார்.


எங்களை நீங்கள் புறக்கணித்தாலும் எங்களை புறக்கணிக்காமல் எங்கள் லட்சியத்தை அடைய எங்களுக்கும் ஒரு ஆயுதம் உண்டு அந்த ஆயுதம் தான் உங்கள் சட்டை பையில் நீங்கள் அழகுக்காக வைத்திருக்கும் பேனா அந்தப் பேனா உங்களுக்கு சொந்தமானதாக இருக்கலாம் ஆனால் அது வலிமையான எங்களுடைய ஆயுதம் என்பதை நீங்கள் உணரும் காலம் மிக விரைவில் எதிர்பார்ப்புடன் சிறு பத்திரிகை மற்றும் சிறு பத்திரிகை  நிருபர்கள். 

No comments:

Post a Comment