இஸ்லாமியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 7 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் நடை முறைப்படுத்த வேண்டும் தவ்ஹீத் ஜமாஅத் கூட்டத்தில் தீர்மானம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 19 September 2022

இஸ்லாமியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 7 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் நடை முறைப்படுத்த வேண்டும் தவ்ஹீத் ஜமாஅத் கூட்டத்தில் தீர்மானம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பித்அத் ஒழிப்பு மாநாடு திருச்சியில் 2023 பிப்ரவரி 05-ல் அறிவிக்கப்பட்டுள்ளது அதனை முன்னிட்டு தவ்ஹீத் ஜமாஅத் ஆளூர் கிளை சார்பாக இஸ்லாமிய வரலாற்று கண்காட்சி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 


மாவட்ட தலைவர் நபில் அஹ்மத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில தலைவர் M.s சுலைமான் பித்அத் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பிலும், பேச்சாளர் அப்துர் ரஹ்மான் நாங்கள் சொல்வதென்ன தலைப்பிலும் உரையாற்றினர். இஸ்லாமிய வரலாற்று கண்காட்சி காலை 10 மணிமுதல் நடைபெற்றது. 


சென்னை கோடம்பாக்கம் பகுதியில் எட்டாம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய சிறுவனை 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தாக்கியுள்ளார். தாக்கும் நேரத்தில் உனக்கு தொப்பி ஒரு கேடா என்று சொல்லி அவனுடைய ஆடைகள் கிழியும் அளவிற்கு தாக்கியுள்ளார். வட மாநிலங்களில் நடைபெறும் இது போன்ற சம்பவங்கள் தமிழகத்திலும் தொடங்கியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது இது போன்ற சங்பரிவார சிந்தனை கொண்டவர்களை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்றும்,


கல்வி வேலைவாய்ப்பில் இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவத்தை அறிந்து கொள்ளும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், மேலும் இஸ்லாமியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 7 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் நடை முறைப்படுத்த வேண்டும் என்றும்,


ஆளூர் வீராகுளம் அருகே சாலை பழுதுபட்டு இருப்பதால் சாலை ஓரத்தில் செல்லக்கூடிய வாகனங்கள் அருகில் இருக்கும் குளத்திற்குள் விழ கூடிய அபாயம் ஏற்படுகிறது, 


ஆளூரில் தெருக்களில் நாய் தொல்லை அதிகமாக இருப்பதால் முதியவர்கள் சிறுவர்கள் சாலையில் நடப்பதற்கு அச்சப்படுகிறார்கள். ஆகவே நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் இந்த பிரச்சனைகளை சரி செய்வதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இப் பொதுக்கூட்டத்தை ஆளூர் கிளை தலைவர் முகம்மது இஸ்மாயில், ஏற்பாடு செய்திருந்தார் செயலாளர் முகம்மது ஹஸன் சாதலி, பொருளாளர் முகம்மது சுலைமான், துணைத் தலைவர் காஜா முகைதீன்,  தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் ஹுஸைன் ஜவாஹிரி, பொருளாளர் செய்யது அகமது கரீம், துணைத் தலைவர் முகம்மது யாசிர், துணைச் செயலாளர்கள் நூருல் அமீன், முகம்மது கியாசுதீன், நிவாஸ், மருத்துவர் அணி செயலாளர் ரியாஸ், மாணவரணி செயலாளர் முகம்மது ரியாஸ், தொண்டர் அணி செயலாளர் ஆசிக் மற்றும் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என 1500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.. 

No comments:

Post a Comment