மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கான தமிழ்நாடு அரசு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக அகஸ்தீஸ்வரம் (தெ) ஒன்றிய திமுக செயலாளர் திரு.பாபு அவர்கள், சுசீந்திரம் தேர்வுநிலை பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி.அனுசியா அவர்கள், கன்னியாகுமரி (கி) மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் திரு.பார்த்தசாரதி அவர்கள், சுசீந்திரம் பேரூர் திமுக செயலாளர் திரு.சு.சுதை சுந்தர் சிற்பி அவர்கள் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் திரு.கண்ணன் அவர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கி சிறப்பித்தனர்.
மேலும், இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment