மைலாடி அருகே வனவிலங்கான மிளா வேட்டையாடியதாக 7 பேர் மீது வழக்கு பதிவு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 September 2022

மைலாடி அருகே வனவிலங்கான மிளா வேட்டையாடியதாக 7 பேர் மீது வழக்கு பதிவு.

கன்னியாகுமரி மாவட்டம் மைலாடி அருகே பெருமாள்புரம் பகுதியில் வனவிலங்கான மிளா வேட்டையில் சிலர் ஈடுபடுவதாக பூதப்பாண்டி சரக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி, விரைந்து சென்ற வனத்துறையினர், பெருமாள்புரத்தை சேர்ந்த லிங்கம் என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.


அப்போது இரண்டு மிளாக்களின் தலைகள் மற்றும் இறைச்சி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக லிங்கத்தை கைது செய்ததுடன் மிளா வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் லிங்கம் உட்பட 7 பேர் வேட்டையாடியது தெரிய வந்தது.


மேலும், மிளா இறைச்சி ஆறு குடும்பங்களுக்கு விநியோகித்ததும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து வேட்டையாடிய ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்ததோடு, லிங்கத்தின் கூட்டாளிகளான 6 பேரையும் வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இறைச்சியை பெற்றுக் கொண்ட ஆறு குடும்பங்களை சேர்ந்த 12 பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 

No comments:

Post a Comment