ஆரல்வாய்மொழி கணேசபுரம் மலைக்கிணறு பகுதியை சார்ந்த சௌமியா (21) இவர் ஆரல்வாய்மொழி கன்னியாகுமரி கூட்டுறவு நூற்பாலையில் தினக்கூலி பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு ராதாபுரம் பகுதியை சார்ந்த சுமன் என்பவரிடம் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி 4 வயதில் மகன் உள்ளார்.
இந்நிலையில் ஆரல்வாய்மொழி மூவேந்தர்நகர் பகுதியை சார்ந்த சுனில்குமார் என்பவரின் மகன் பிரகாஷ் என்பவரும் அதே கூட்டுறவு நூற்பாலையில் பணிபுரிந்து வருகிறார், சௌமியாவிற்கும் சுனில் குமார்-க்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது இதன் காரணத்தினாலே கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு தனது கணவனை பிரிந்து ராதாபுரத்திலிருந்து தற்போது கணேசபுரம் மலைக்கிணறு பகுதியில் பிரகாஷ்சுடன் வாழ்ந்து வருகிறார்.
இதனிடையே சௌமியா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment