அதன்பிறகு மாலை 3 மணி வரை புலியூர்குறிச்சி சர்ச் பகுதியில் ஓய்வெடுத்தார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் ராகுல் காந்தியுடன் நடை பயணத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களும் ராகுல் தங்கும் இடத்திலேயே தங்கி வருகின்றனர்.
இன்று ராகுல் புலியூர்குறிச்சி சர்ச்சில் ஓய்வெடுத்தபோது, கன்னியாகுமரி காங்கிரஸ் எம். பி விஜய வசந்த் அங்கிருந்த திண்ணையில் படுத்து ஓய்வெடுத்தார், கடந்த எம். பி இடைத் தேர்தலின் போது விஜய் வசந்த் தாக்கல் செய்த சொத்து விவரங்களின்படி, விஜய் வசந்த்துக்கு 40 கோடிக்கு அசையும் சொத்துகளும், 12 கோடிக்கு அசையா சொத்துகளும் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
மொத்தமாக சுமார் 53 கோடி சொத்து மதிப்புகளைக் கொண்டவர் விஜய் வசந்த் அப்படிப்பட்ட கோடீஸ்வர எம். பியான விஜய் வசந்த், ராகுல் காந்தியுடன் மேற்கொண்டுள்ள நடைபயண அலுப்பில், சர்ச் திண்ணையில் வெறும் தரையில் படுத்துத் தூங்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தனது ஷூவை தரையில் கழற்றிப் போட்டுவிட்டு, தலைக்கு கையை வைத்து படுத்து ஓய்வெடுக்கிறார் விஜய் வசந்த், எவ்வளவு பெரிய கோடீஸ்வரர், வெயிலில் நடந்து, திண்ணையில் தூங்குகிறார் என வியக்கிறார்கள் பொதுமக்கள்.
No comments:
Post a Comment