நாகர்கோவிலில் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதை தடுத்து பார்க்கிங் வசதியை ஏற்படுத்த மேயர் ஆய்வு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 14 September 2022

நாகர்கோவிலில் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதை தடுத்து பார்க்கிங் வசதியை ஏற்படுத்த மேயர் ஆய்வு.


நாகர்கோவில் மாநகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்கும் வகையில் பார்க்கிங் இடங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது‌ ஏற்கனவே டதி பள்ளி பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் சாலையோரங்களில் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு வருகிறது. 


இதை ஒழுங்குப்படுத்தும் வகையில் ஒயிட் ஹவுஸ் தெருவில் பார்க்கிங் வசதியை ஏற்படுத்திட குமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயருமான வழக்கறிஞர் ரெ.மகேஷ் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன்  துணை மேயர் மேரி பிரின்சிலதா மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன் மாநகரச் செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த் மண்டல தலைவர் மாமன்ற உறுப்பினர் உட்பட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment