அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்தும் அனுமதியின்றி டாஸ்மாக் மதுபான பாரினை நடத்துவதை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 16 September 2022

அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்தும் அனுமதியின்றி டாஸ்மாக் மதுபான பாரினை நடத்துவதை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.


கன்னியாகுமரி மாவட்ட அஇஅதிமுக சார்பில் விடியா திமுக அரசின் தமிழக மக்களை வாட்டி வதைக்கும் மின் கட்டண உயர்வை கண்டித்தும் அனுமதியின்றி டாஸ்மாக் மதுபான பாரினை நடத்துவதை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  16.9.2022 காலை 10.30 மணிக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர் K.T.பச்சைமால்  குமரி (மே) மாவட்ட கழக செயலாளர் D.ஜாண்தங்கம்  மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜி.சுகுமாரன்  மாமன்ற உறுப்பினர் அக்ஷயாகண்ணன்  மாவட்ட கழக இணை செயலாளர் தோவாளை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி சாந்தினி பகவதியப்பன்  அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழகச் செயலாளர் ஜெசிம்  ராஜாக்கமங்கல ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஐயப்பன் ராஜகமங்கல ஒன்றிய கழகச் செயலாளர் வீராசாமி குளச்சல் நகர்மன்ற உறுப்பினர் ஆறுமுகராஜா  பகுதி கழக செயலாளர்கள்  ஜெயகோபால் முருகேஸ்வரன் ஜெபின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசின் கண்மூடி தனமான மின் கட்டண உயர்வை கண்டித்தும் அனுமதியின்றி டாஸ்மாக் பாரினை நடத்துவதை கண்டித்தும் பொய்யான வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து ஆட்சிக்கு வந்த விடியா திமுக அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.


இந்நிகழ்வில் மாநில மாவட்ட மாநகர ஒன்றிய நகர பேரூர் ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள் மாநில மாவட்ட மாநகர ஒன்றிய நகர பேரூர் ஊராட்சி கிளை கழக சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment