பாரத் ஜோடா யாத்திரை என்பதற்கு பதில் தோடா யாத்திரை என்று பெயர் வைத்திருக்கலாம். மத்திய மந்திரி வி.கே.சிங். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 September 2022

பாரத் ஜோடா யாத்திரை என்பதற்கு பதில் தோடா யாத்திரை என்று பெயர் வைத்திருக்கலாம். மத்திய மந்திரி வி.கே.சிங்.

கன்னியாகுமரி அருகே நரி குளத்தில் உள்ள பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.இந்த பாலத்திற்காக நாட்டப்பட்ட கல்வெட்டில் இருந்த பிரதமர் மோடியின் படத்தை காங்கிரஸ் நிர்வாகிகள் சேதப்படுத்தி உள்ளனர். இது ஒரு ஒழுக்கமற்ற செயலாகும்.பாரத் ஜோடா யாத்திரை என்பதற்கு பதில் தோடா யாத்திரை இன்று பெயர் வைத்திருக்கலாம். 


பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கான பிரதமர் ஆவார். ஆனால் காங்கிரசார் குறுகிய கண்ணோட்டத்துடன் அவரது படத்தை சேதப்படுத்தி உள்ளனர் .ராகுல் காந்தியின் யாத்திரையில்  அரசியலையும் மதத்தையும் இணைத்துள்ளார். 


யாத்திரையின் போது சில மத தலைவர்களை ராகுல் காந்தி சந்தித்துள்ளார். மத்திய மந்திரி வி.கே சிங் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி பேட்டியின் போது முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் ,எம். ஆர்.காந்தி எம்.எல்.ஏ மாநில செயலாளர் மீனாதேவ்,மாநில மகளிர் அணி தலைவி உமாரதி ராஜன் மாவட்ட பொருளாளர் முத்துராமன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment