புகழ் பெற்ற சுசீந்திரம் கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 2 September 2022

புகழ் பெற்ற சுசீந்திரம் கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது.


சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் ஆவணி மாத திருவிழாவை தவிர மற்ற 3 திருவிழாக்களும் தாணுமாலய சாமிக்கு நடைபெறும்.


ஆவணி மாத திருவிழா மட்டும் திருவேங்கடம் விண்ணவரம் பெருமாளுக்கு நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. நாளை காலை 9 மணிக்கு கொடியேற்றம்  நடைபெற்றது. மாத்தூர் மடம் தந்திரி சங்கர நாராயணகுரூ கொடியேற்றி வைத்தார்.


திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம் காலை மற்றும் மாலை வேளை களில் நடக்கிறது. 9-ம் திருவிழா நாளான 10-ந் தேதி மாலை 5 மணிக்கு இந்திரன் தேராகிய சப்பர தேரில் பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி ஆகியோர் 4 ரத வீதிகளில் உலா வரும் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. 10ந் திருவிழாவான 11-ந் தேதி திரு ஆராட்டு வைபவம் நடக்கிறது.


இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவிலின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் கோவில் பணியாளர்களும், பக்தர்களும் இணைந்து செய்து உள்ளனர். 

No comments:

Post a Comment