அதிமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் இன்று தீர்ப்பு கூறியது. இதையடுத்து தமிழக முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.
குமரி மாவட்ட அதிமுக சார்பில் நாகர்கோவில் வடசேரியில் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் கொண்டாடப்பட்டது. வடசேரியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தும் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினார்கள்.
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று பெற்று ஆட்சி அமைக்கும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் பேட்டி
No comments:
Post a Comment