அகில இந்திய சிகை மற்றும் அழகுக்கலை நிபுணர்கள் சங்கம் சார்பாக 13-09-2022 செவ்வாய்க்கிழமை நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் உடல் ஊனமுற்ற மற்றும் ஆதரவற்ற ஏழைகளுக்கு உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளான (உடை, போர்வை, சோப், பிஸ்கட், தண்ணீர்) வழங்கினார்கள்.
நாகர்கோவில் அழகு சங்க சார்பில் தலைவர் திருமதி ஷாலி ஜாண், செயலாளர் திருமதி பினு ராஜேஷ், பொருளாளர் திருமதி ராதிகா வினோத், துணைத் தலைவர் திருமதி பெர்லின், துணைச் செயலாளர் திருமதி ரெஜிதா, துணை பொருளாளர் திருமதி செலின் ரூபி, ஏனைய தலைவர்கள் ஹெலன், லதா, ஜாமினி, மீனாட்சி, அரசம்மை, வேணி, உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 35 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை விநியோகம் செய்தனர். இந்த நிகழ்வை நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலைய பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
No comments:
Post a Comment