நாகர்கோவில் மாநகராட்சியில் புதிய கணினி வரி வசூல் மையம் திறப்பு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 19 September 2022

நாகர்கோவில் மாநகராட்சியில் புதிய கணினி வரி வசூல் மையம் திறப்பு.

நாகர்கோவில் மாநகராட்சி ஆளூர் பகுதியில் புதிய கணினி வரி வசூல் மையத்தினை மாண்புமிகு மேயர் ரெ.மகேஷ்  அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர் திரு ஆனந்த் மோகன் இ.ஆ.ப துவக்கி வைத்தார்கள்.


தொடர்ந்து முதல் வரி ரசீதினை மாநகராட்சி ஆணையர் அவர்கள் போட மாண்புமிகு மேயர் அவர்கள் பணம் செலுத்தி பெற்றுக் கொண்டார்கள், பொதுமக்களின் மக்களின் வசதிக்காக டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் மற்றும் யுபிஐ மூலமாகவும் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


மேலும் வரும் நாட்களில் அங்கு மாநகராட்சி பிற சேவைகளும் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும் என ஆணையர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள், நிகழ்வில் மாநகராட்சி துணை மேயர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment