கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் அதிகமாக புகார் மனுக்கள் விசாரணைக்கு நிலுவையில் இருந்த நிலையில் அதன் விசாரணையை விரைவில் முடிக்கும் வகையிலும், பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில், போலீஸ் visibility யை அதிகரிக்கும் விதமாக மாலை ரோந்துக்கு செல்லும் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் புகார் மனு அளித்தவர்களின் வீடுகளுக்கே சென்று விசாரணை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. D.N. ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் உத்தரவிட்டார்.
அதன்படி கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்திலுள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் இந்த நடைமுறையானது பின்பற்றபடுகிறது, இதனால் புகார் மனுக்கள் மீது நேர்மையான விசாரணை நடைபெறுவதுடன், பொதுமக்கள் போலீஸ் நல்லுறவும் மேம்படும். மேலும் போலீஸ் visibilty அதிகரிப்பதால் பொதுமக்களிடயே பாதுகாப்பு உணர்வும் அதிகரிக்கிறது. இத்திட்டமானது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
No comments:
Post a Comment