மத்திய பிஜேபி - மோடி ஆட்சியில் அதிகரித்துவரும் மக்கள் விரோத நடவடிக்கைகள்! விலைவாசி உயர்வு, வறுமை, வேலையின்மை, வெறுப்பு அரசியல்,அநியாய வரிவிதிப்பு, பொதுத்துறைகள் விற்பனை, மாநில மனித உரிமைகள் பறிப்பு, ஒற்றை கலாச்சாரம் திணிப்பு, பன்முகத்தன்மை சிதைப்பு, மதசார்பின்மை, ஜனநாயக மாண்புகளுக்கு பேராபத்து, மக்களின் வாழ்வாதாரங்களை சீரழித்து சேவகம் செய்யும் மோடியின் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் ! என்ற மக்கள் சந்திப்பு இயக்க தெருமுனைக்கூட்டம் சி.பி.ஐ.(எம்) - தோவாளை வட்டாரக்குழு சார்பில் திட்டுவிளை சந்திப்பில் நடைபெற்றது.
வட்டாரக்குழு உறுப்பினர் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ராஜேஷ், முருகன், மனோகரன், முகபீஸ், மகாதேவன், ஆதிலெட்சுமி, சுப்பிரமணியம், ஷாமிலி, தங்கராஜ், அருளானந்தம், கனகராஜ், பிச்சம்மாள், லீலா, மரியசெல்வி, முருகன்,சுவிசேசமுத்து, சரஸ்வதி, முன்னிலை வகித்தனர்.
வட்டார செயலாளர் மிக்கேல் துவக்கவுரை நிகழ்த்தினார். வட்டாரக்குழு உறுப்பினர்கள் நீலன், பேதுரு, ஐயப்பன்,பொன்னம்மாள், வடிவேல் குமார் சிற்றுரையாற்றினர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன், மற்றும் மாவட்ட செயலாளர் செல்லசுவாமி சிறப்புரையாற்றினர்.
No comments:
Post a Comment