கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட திக்குறிச்சி கடவிளையை சேர்ந்தவர் அஜய் சிங் (20) இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
வழக்கம் போல் பணிக்கு சென்று விட்டு தனக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பக்கத்தில் வைத்து விட்டு உணவு அருந்தி விட்டு தூங்கச் சென்றுள்ளார். நள்ளிரவில் படார் என்று சத்தம் கேட்டுள்ளது. இதனால் பதறி அடித்த அஜய் சிங் மற்றும் அவரது குடும்பத்தார் வெளியே வந்து பார்த்த போது அவரது மோட்டார் சைக்கிள் மளமளவென தீ பிடித்து எரிந்து கொண்டிருந்துள்ளது.
தீயை அணைக்க முயன்ற போது அதற்கு முன்பு முழுமையாக மோட்டார் சைக்கிள்கள் எரிந்து எலும்பு கூடாக காட்சி அளித்துள்ளது. இதுகுறித்து அஜய் சிங் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் மோட்டார் சைக்கிள் எவ்வாறு தீப்பிடித்து எரிந்தது என்றும் ஏதேனும் மர்ம ஆசாமிகள் தீ வைத்துவிட்டு தப்பி சென்றனரா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment