கன்னியாகுமரி மாவட்ட அனைத்து சிறுபான்மையினர் கூட்டமைப்பு சார்பில் எழுச்சி மாநாடு நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நடந்தது. கூட்டத்திற்கு கன்னியாகுமரி மாவட்ட அனைத்து சிறுபான்மையினர் கூட்டமைப்பு தலைவர் ஞான தாசன் தலைமை வகித்தார்.
பொதுச்செயலாளர் மீரான்மைதீன், மனிதநேய மக்கள் கட்சி நிறுவனர் ஜவாஹிருல்லா நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.
சிறுபான்மையினர் தலைவர்கள் உரையாடல்கள், பிரார்த்தனை கூட்டத்திற்கும் மாற்று மத சகோதரர்களை அழையுங்கள் அவர்கள் உரையாடட்டும். நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கு சட்டத்துக்கு விரோதமாக அதிகளவில் சலுகைகளை வழங்கியது மத்திய பாஜக அரசு.
வறுமை கோடடிற்க்கு கீழ் உள்ள 30 சதவீத மக்கள் மற்றும் நடுத்தர மக்களுக்கு இல்லாமல் அம்பானி அதானி போன்ற ஒரு சதவீதம் உள்ள புதிய கார்ப்பரேட் நிறுவன சிறுபான்மையினருக்கு அள்ளி வழங்குகிறது. என்று தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்
No comments:
Post a Comment