மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு.வ.விஜய்வசந்த் அவர்கள், முன்னிலையில் நடைபெற்றது.
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் பயன்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகியவை ஊரக ஏழை, எளிய பொதுமக்களுக்கு சென்றடைந்து, திட்டங்கள் அனைத்தும் திட்ட வழிகாட்டி நெறிமுறைகளின்படி செயல்படுவதை கண்காணிக்க மத்திய அரசு மாவட்ட அளவில் மாவட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து மாவட்டத்தின் வளர்ச்சி திட்டப் பணிகளை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர் திரு.வ.விஜய்வசந்த் அவர்கள் முன்னிலையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கு நடைபெற்றது.
இன்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்ததாவது கன்னியாகுமரி மாவட்டத்தில், மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் (MGNREGS) கீழ், கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பெருக்கும் வகையில், தனிநபர் விவசாய நிலங்களில் மண்வரப்பு அமைத்தல், கழிவுநீர் உறிஞ்சுக்குழி, தனிநபர் கழிப்பறை, சாலை அமைத்தல், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கட்டிடம், உணவு தானிய கிட்டங்கி, பண்ணைக்குட்டை அமைத்தல், தடுப்பணை மற்றும் கால்வாய் புனரமைத்தல், ஊரக பகுதிகளிலுள்ள ஏழை, எளிய பொதுமக்களுக்கு பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் (PMSY (G)), ஊரக பகுதி மக்கள் சுகாதாரத்தில் முன்னேற்றம் அடையவும், திறந்தவெளியில் மலம் கழித்தலை தவிர்த்தல், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை ஆகியவற்றை செயல்படுத்தும் தூய்மை பாரத இயக்கம், பிரதமந்திரியின் கிராமப்புற சாலை மேம்பாட்டுத்திட்டம் (PMGSY), ஒருங்கிணைந்த உள்ளூர் பொருளாதார வளர்ச்சி, மேம்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகள், கிராமப்புற பகுதிகளில் உருவாக்கும் விதமாக தேசிய ரூர்பன் இயக்கம் (National Rurban Mission), பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம் (MPLADS), ஊரக பகுதிகளில் வாழும் மக்களுக்கு வீடுகள் தோறும் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான 'ஜல் ஜீவன் மிஷன்" (Jal Jeevan Mission), விவசாய பெருங்குடி மக்களுக்கான நுண்ணீர் பாசனத்திட்டம் (PMKSY), பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம் (PMFBY), மண்வள அட்டை இயக்கத்திட்டம் (SHC), புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீடுத் திட்டம் (RPMFBY), தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டம் NADP (RKVY), மாவட்ட தொழில் மையம் வாயிலாக பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) ஆகிய வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வாயிலாக அதிக மக்கள் தொகை கொண்ட கிராம ஊராட்சிகளில் மின்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தீன்தயாள் உபாத்தியாய கிராம மின் வளர்ச்சித்திட்டம் (DDUGJY), பேரூராட்சி பகுதிகளில் மின்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத்திட்டம் (IPDS) உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்ற படாமல் இருந்தால் விரைந்து நிறைவேற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் வாயிலாக கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் மாதந்தோறும் எடை மற்றும் உயரம் கணக்கிட்டதின் மூலம் கண்டறிந்து, அவர்களுக்கு வீடுகளுக்கு சென்று பார்வையிட்டு. ஊட்டச்சத்து உணவுகள் குறித்த ஆலோசனைகள் வழங்கவும், கடுமையான மற்றும் தீவிர எடை குறைந்த குழந்தைகளை கண்டறியப்பட்டால் அவர்களை மேல் மருத்துவ பரிசீலனைக்காக மருத்துவ குழுவிற்கு பரிந்துரை செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.
மக்கள் நல்வாழ்வு துறை வாயிலாக, செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து மத்திய அரசின் திட்டங்களையும் தொடர்ந்து செல்படுத்தி, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் விதமாக திட்டங் டங்களின் பயன்களை எடுத்துக்கூற வேண்டும். மேலும், நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையம் கட்டுவதற்கான பணியினை விரைந்து செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
அம்ரூத் திட்டத்தின்கீழ் மாநகராட்சி, நகராட்சிகள் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் அபிவிருத்தித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
No comments:
Post a Comment