ரப்பர் தோட்டத்தில் இராஜநாக பாம்பு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 6 September 2022

ரப்பர் தோட்டத்தில் இராஜநாக பாம்பு.

கன்னியாகுமரி மாவட்டம் வேளிமலை வனச்சரகம் சுருளகோடு பிரிவு வீரப்புலி RF அருகிலுள்ள மூலையறை பகுதியில் தனிஸ்சிலாஸ் என்பவரின் ரப்பர் தோட்டத்தில் இராஜநாக பாம்பு இருப்பதாக தகவல் கொடுக்கப்பட்டது.


தகவலின் அடிப்படையில்  வனச்சரக அலுவலர் தலைமையில் வனக்காப்பாளர்கள்  ஜெயக்குமார்,  சரவணன், வேட்டை தடுப்பு காவலர்களான. சாஷி, கேசவன்,  பாலசுப்பிரமணியன்,  பிரபு சிங், சுமன் ஆகியோரால் இராஜநாக பாம்பு சுமார் காலை 8:15 மணி அளவில் பாதுகாப்பான முறையில் பிடித்து பெருஞ்சாணி அணை அருகில் சுமார் காலை 9:50 மணி அளவில் வனவர்  பிரான்சிஸ் அரவிந்த் உடனிருக்க பாதுகாப்பாக வனப்பகுதியில் விடப்பட்டது .

No comments:

Post a Comment