மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்.! - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 12 September 2022

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்.!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா. அரவிந்த், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று (12.09. 2022) நடைபெற்றது.


இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித் தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 234 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டது. 


பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. மா. அரவிந்த், இ. ஆ. ப., அவர்கள் அறிவுறுத்தினார்கள்.


இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் அ. சிவப்பிரியா, தனித்துணை ஆட்சியர் (ச. பா. தி) தே.திருப்பதி மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment