பாதாள சாக்கடை வேலை நடைபெற இருப்பதால் போக்குவரத்து மாற்றம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 12 September 2022

பாதாள சாக்கடை வேலை நடைபெற இருப்பதால் போக்குவரத்து மாற்றம்.

படம் : google.com 
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட சவேரியார் கோவில் சந்திப்பில் பாதாள சாக்கடை இணைக்கும் பணி 13.09.2022-ம் தேதி நடைபெற இருப்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. முதல் 5 நாட்கள் வடசேரியில் இருந்து வேப்பமூடு. அண்ணாபேருந்து நிலையம், சவேரியார்கோவில் சந்திப்பு மார்க்கமாக கன்னியாகுமரி அஞ்சுகிராமம் மற்றும் மணக்குடி செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதையாக வேப்பமூடு சந்திப்பிலிருந்து PWD Road வழியாக செட்டிக்குளம் Jn, சவேரியார்கோவில் Jn வழியாகவும் Collectorate Junction-ல் இருந்து Railway Station, கன்னியாகுமரி. அஞ்சுகிராமம் மற்றும் மணக்குடி செல்லும் அனைத்து வாகனங்களும் செட்டிக்குளம் Jn, சவேரியார்கோவில் Jn வழியாக செல்ல வேண்டும்.


மேலும் பீச்ரோடு சந்திப்பிலிருந்து நாகர்கோவில், திருவனந்தபுரம் செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதையாக A.R. Camp Road, ராமன்புதூர் Jn வழியாக செல்ல வேண்டும்.


எனவே இந்த பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக கோட்டார் P.S. முதல் சவேரியார்கோவில் Jn வரை உள்ள சாலை 13.09.2022 முதல் 5 நாட்கள் மூடப்படுகிறது. மேற்படி போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்களும் வாகன ஓட்டுனர்களும் ஒத்துழைக்குமாறு வேண்டுகிறோம்.என போக்குவரத்து ஒழுங்கு பிரிவு  காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment