கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் உட்கோட்டம், மண்டைக்காடு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மண்டைக்காடு கருமண்கூடலைச் சேர்ந்த திரு.கல்யாணசுந்தரம் என்பவரின் வீட்டின் முன்பு மர்ம நபர்கள் 24.09.2022ம் தேதி இரவில் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் திரியை கொளுத்தி வீசி வீட்டின் ஜன்னல் கண்ணாடி மற்றும் சைக்கிளை சேதப்படுத்தியதாக மண்டைக்காடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
முதற்கட்ட வழக்கு விசாரணையின் அடிப்படையில் மேற்படி குற்றச் செயலில் ஈடுப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்ஸாமில் என்ற ஷமில்கான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment