இதற்காக ஜெயகரன் மருத்துவமனையில் சுமார் 2 லட்ச ரூபாய் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக கட்டணமாக பெற்றுள்ளனர். தற்போது கடந்த மாதம் உடல்நிலை சரியில்லை என்று பரிசோதனை செய்து பார்த்த பின்பு அனிதா மீண்டும் கருவுற்றிருப்பதாக பரிசோதனை முடிவுகள் தெரிவித்துள்ளன அதன்பின்பு 2016 ஆம் ஆண்டு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த ஜெயகரன் மருத்துவமனைக்கு சென்று நீங்கள் எனக்கு இரண்டு லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ததாக கூறினீர்கள் தற்போது நான் கருவுற்று உள்ளேன் என அனிதா கூறியுள்ளார்.
அதற்கு மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சை அளிக்கிறேன் என்ற பெயரில் மீண்டும் அனிதாவை மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்து தற்போது 80 ஆயிரம் ரூபாய் கட்டணமாக நிர்ணயித்து உள்ளார்கள். ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக இரண்டு லட்ச ரூபாய் பெற்றுக் கொண்ட நிலையில் மீண்டும் கருவுற்றது மருத்துவமனை மற்றும் மருத்துவர்களின் கவனக்குறைவு ஆதலால் மீண்டும் சிகிச்சைக்கு நீங்கள் பணம் கேட்கக்கூடாது என்று அனுதாவின் கணவர் பெல்லார்மின் மருத்துவமனை நிர்வாகத்தை கேட்டுக் கொண்ட போதும் ஜெயகரன் மருத்துவமனை நிர்வாகம் பெல்லார்மினை மிரட்டி பணம் கொடுத்தால் மட்டுமே உனது மனைவியை டிஸ்சார்ஜ் செய்வோம் இல்லை என்றால் வெளியே அனுப்ப மாட்டோம் என்று அனிதாவை மருத்துவமனையில் சிறை வைத்துள்ளனர்.
தனது மனைவியை மருத்துவமனையில் இருந்து வெளியே அனுப்ப வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகத்திற்கும் குமரி மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் அனிதாவின் கணவர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தது அனைவரையும் கண்கலங்க வைத்தது. இதுபோன்று பணம் பறிக்கும் மருத்துவமனைகளின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இது போன்ற மருத்துவமனைகள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதோடு அப்பாவி பெண்கள் பாதிக்கப்படாதவாறு குமரி மாவட்ட நிர்வாகம் உறுதியான நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் குமரி மாவட்ட நிர்வாகத்திற்கும் சுகாதாரத் துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment