பஸ்நிலையத்தில் கண்டெடுத்த பர்சை உரியவர்களிடம் ஒப்படைத்த திருநங்கை. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 September 2022

பஸ்நிலையத்தில் கண்டெடுத்த பர்சை உரியவர்களிடம் ஒப்படைத்த திருநங்கை.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு பஸ்ஸில் யாசகம் பெறுவதற்காக ஸ்வீட்டிலி என்ற திருநங்கை ஒருவர் ஏறி உள்ளார்.



அப்போது ஒரு சீட்டின் அடியில் ஒரு பர்ஸ் கிடந்துள்ளது, அந்த பார்சில் ரூ. 5000 மற்றும் ஓட்டுனர் உரிமம் இருந்துள்ளது அந்த பார்சை போக்குவரத்துறை அதிகாரிகள் இருக்கும் அறையில் ஒப்படைத்துள்ளார்.
 

அதன் பின்னர் வெண்டலியோட்டை சேர்ந்த விஜூகுமார் என்பவர் தனது பார்ஸ் மற்றும் பணம் ஆகியவற்றை தவற விட்டதை தெரிவித்துள்ளார்.


இதையடுத்து பார்ஸ் மற்றும் பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. நேர்மையாக நடந்த திருநங்கையை அனைவரும் பாராட்டினர்.

No comments:

Post a Comment