நவம்பர் 1 கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 27 October 2022

நவம்பர் 1 கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி சேர்ந்த தினத்தினை முன்னிட்டு 01.11.2022 (செவ்வாய் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது,

01.11.2022 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2022 நவம்பர் திங்கள் இரண்டாவது சனிக்கிழமை (12.11.2022) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்.


கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி சேர்ந்த தினத்திற்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881) -இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 01.11.2022 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த், இ.ஆ.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். 

No comments:

Post a Comment