தேங்காய்பட்டணம் துறைமுக புனரமைப்பு பணிகளைக் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆய்வு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 28 October 2022

தேங்காய்பட்டணம் துறைமுக புனரமைப்பு பணிகளைக் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆய்வு.

தேங்காய்பட்டணம் துறைமுகம் பகுதியில் உள்ள முகத்துவாரத்தில் மணல் திட்டு காரணமாக அவ்வப்போது படகுகள் கவிழ்ந்து விபத்துகள் ஏற்பட்டுவந்தது. இதனைத் தடுக்க வேண்டி பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார். 


இந்நிலையில்   துறைமுக முகத்துவாரத்தைச் சீரமைக்க 116 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று முகத்துவாரம் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை அதிகாரிகளுடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது நிருபர்களிடம் பேசிய எம்.பி விஜய் வசந்த் கால நிலை ஒத்துழைப்பு அளித்தல் விரைவில் புனரமைப்பு பணிகள் முடிக்கப்படும் எனவும் அருகில் உள்ள பகுதிகளில் தூண்டில் வளைவு அமைக்கும் முயற்சியும் விரைவில் துவங்கும் என்றும் கூறினார். 


மேலும் கடந்த ஆட்சியில் மீனவர்களிடம் கலந்து ஆலோசிக்காமல்  பணிகள் செய்ததால் தான் பாதிப்பு ஏற்பட்டது என்றும் இந்த முறை மீனவ மக்களின் ஆலோசனை பெறப்பட்டே  பணிகள் நடைபெற்று வருவதாகவும் எம்.பி விஜய்வசந்த் கூறினார். 

இந்த ஆய்வின் போது மீன்வளத்துறை செயற்பொறியாளர் சிதம்பர மார்த்தாண்டன், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் ஜோர்தான், மீனவர் அணி மாவட்ட தலைவர் கென்னடி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆரோக்கியராஜன், வார்டு உறுப்பினர் கிளிட்டஸ் மற்றும் சுனில்,  சகாயதாஸ், சவுகத்அலி, சேக், சமீர் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment